வால்பாறையில் தாயை பிரிந்த யானை குட்டி, மீண்டும் தனது தாயுடன் சேர்ப்பு.

by Editor / 29-12-2023 10:24:40pm
வால்பாறையில் தாயை பிரிந்த யானை குட்டி, மீண்டும் தனது தாயுடன் சேர்ப்பு.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வன சரகதிறகு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பிறந்து 4 அல்லது 5 மாதம் மதிக்க தக்க யானை குட்டி தனது தாயை பிரிந்து 3கிலோ மீட்டர் தூரம் தனியாக வந்து நின்று கொண்டிருந்ததை அறிந்த மானாம் பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் வன உயிரின் தடுப்பு காவலர்கள் வன துறையினர் உடனடியாக சம்பவ இடத்திறகு சென்று யானை குட்டியை மீட்டு வாகனத்தில் ஏற்றி நீரில் குளிப்பாட்டி காட்டு யானை கூட்டத்தை பன்னிமேடு எஸ்டேட் சோலை பகுதியில் ட்ரோன் மூலம் கண்டறியப்பட்டு கூட்டமாக இருந்த யானைகளுடன் யானைக்குட்டியை அதன் தாயுடன் சேர்க்கப்பட்டது. பின் வன குழுவினர் 4குழுக்களாக பிரிந்து யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

Tags : வால்பாறையில் தாயை பிரிந்த யானை குட்டி, மீண்டும் தனது தாயுடன் சேர்ப்பு.

Share via