புதிதாக தீவிரவாத தடுப்புப்பிரிவு - முதல்வர் அறிவிப்பு

by Staff / 21-04-2023 02:44:32pm
புதிதாக தீவிரவாத தடுப்புப்பிரிவு - முதல்வர் அறிவிப்பு

தீவிரவாத நடவடிக்கைகளை திறமையாக எதிர்கொள்ள காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப்பிரிவு (Anti Terrorism Squad) ஒன்று 383 பணியாளர்களைக் கொண்டு சுமார் 5751.61 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கையில் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட அவர், பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், சமூக வலைதளங்களில் சட்டம் - ஒழுங்கு குறித்து பரப்பப்படும் தகவல்களை உடனுக்குடன் திரட்டி மேல்நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் சமூக ஊடகப் பிரிவு உருவாக்கப்படும் என்றார்.

 

Tags :

Share via