பட்டியலினத்தவர்கள் கோவிலில் சென்று வழிப்பட அனுமதி
பழனி அருகே உள்ள செல்வ விநாயகர், உச்சிகாளியம்மன் ஆகிய கோவிலுக்குள் சென்று வழிப்பட பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பட்டியலினத்தவர்களுக்கு பழனியில் உள்ள செல்வ விநாயகர், உச்சிகாளியம்மன் ஆகிய கோவிலுக்குள் சென்று வழிப்பட அனுமதி வழங்கப்படுகிறது. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர், கடவுள் வழிப்பாட்டில் சாதிய பாகுபாடுகளுக்கு அனுமதியில்லை என தீர்ப்பளித்தனர். மேலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
Tags :