கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்..?
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வலுத்து வருகிறது. இந்நிலையில், வரும் 9ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு நிலையானது 10, 11ம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் மீண்டும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 41 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த மாதம் 31ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக, நான்கு நாள்களில் மட்டும் சராசரியாக 27 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Tags :