செல்போன் சார்ஜர் வழியாக மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

by Staff / 13-11-2022 03:10:27pm
செல்போன் சார்ஜர் வழியாக மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் கடகடப்பை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் செல்போனில் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் சத்தம் போட்ட அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் விக்னேஷ்சின் அண்ணன் ஈஸ்வரன் புகார் செய்தார்.அதன் பேரில், காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via