35 பாகங்களாக வெட்டி 18 இடங்களில் வீச்சு கொடூர கொலை

by Staff / 14-11-2022 01:20:10pm
35 பாகங்களாக வெட்டி 18 இடங்களில் வீச்சு கொடூர கொலை

டெல்லியில் வசித்து வந்த மும்பையை சார்ந்த பூனாவல்ல – ஷ்ரதா தம்பதியினர், வீட்டை விட்டு ஓடி வந்து, ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பூனாவல்ல ஷ்ரதாவை கண்டம் துண்டமாக வெட்டி பிரிட்ஜில் வைத்துவிட்டு 18 நாட்கள் டெல்லி முழுவதும், இரவு 2 மணிக்கு சுற்றிதிரிந்து அவரின் உடல் பாகங்களை வீசியுள்ளார்.

ஷ்ரதாவின் தந்தையர் தனது மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு பூனாவல்லாவை கைது செய்தனர். விசாரணையில் ஷ்ரதா, இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என அடிக்கடி கேட்டு வந்ததால் இவர்களுக்கிடையே சண்டை எழுந்ததால், ஷ்ரதாவை கொன்று வீசியது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via