நாய் கடித்தால் உரிமையாளருக்கு அபராதம்

by Staff / 14-11-2022 01:14:45pm
நாய் கடித்தால் உரிமையாளருக்கு அபராதம்

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் வளர்ப்பு நாய் யாரையாவது கடித்தால் அந்த நாயின் உரிமையாளருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என நொய்டா நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தாவிட்டால் மாதம் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via