தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா நாளை துவக்கம் பாதுகாப்பு ஏற்பாடுகள் : டி.ஐ.ஜி., எஸ்பி ஆய்வு

உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா நாளை காலை 7-மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி வரை மொத்தம் 11-நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5-ம் தேதி தங்கதேர் பவனி விழா நடைபெறுகிறது. இந்த திருவிழா பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஸ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் ஆலய வளாகம், பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறுகையில் "11-நாட்கள் நடைபெற இருக்கும் மாதா கோவில் திருவிழாவிற்காக மாதா கோவில் பகுதி முழுவதும் 50-சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 டி.எஸ்.பிகள் தலைமையில் 1400-போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதைபோல் சீருடை இல்லாமல் 110-சிறப்பு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் உயர்மட்ட கோபுரங்கள் சில இடங்களில் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஆலயத்திற்கு வரக்கூடியவர்கள் வாகனங்களை நிறுத்த ஆலயம் அருகாமையிலையே பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருவிழாவினை எவ்வித அசம்பாதவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யபட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Tags :