தாயை கொன்ற மகனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதிப்பு.

by Editor / 25-07-2023 08:59:00pm
 தாயை கொன்ற மகனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதிப்பு.

புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசேகர உடையார். இவரது மனைவி ஜெயமேரி. கணவர் இறந்த நிலையில் தனதுமகனுடன் வசித்து வந்தார். கடந்த 2019 மார்ச் 5 ஆம் தேதி  தாயை கொன்றுவிட்டு அவரது உடலுடன் இருந்த நிலையில் 12-03-2029 அன்று அவரது மகன் அருண் @ அமலோற்பவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி இளவரசன் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட அருண்னுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக 5000 ரூபாயும் விதித்து தீர்ப்பளித்து உள்ளார்.

 

Tags :

Share via