கந்து வட்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by Staff / 17-11-2022 01:56:12pm
கந்து வட்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விஜயமங்கலம் ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த டெய்லர் செங்காவேரி (வயது 24) என்பவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது: - நான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்கள் ஊரை சேர்ந்த ஒருவரிடம், 2 இருசக்கர வானம் மற்றும் ¾ பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை அடமானம் வைத்து ரூ. 1 லட்சம் கடன் வாங்கினோம். இதற்காக மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தோம். இதுவரை ரூ. 48 ஆயிரம் வரை வட்டி செலுத்தியுள்ளோம். கடந்த மாதம் வட்டி தொகை செலுத்த முடியவில்லை. இதனால் அந்த நபர் 2 மாத வட்டி தொகையாக ரூ. 23 ஆயிரம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினார். நான் கால அவகாசம் கொடுங்கள் என கேட்டதற்கு மறுத்து, தற்போது ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பாண்டு பத்திரம் வாங்க பணம் கொடு, அதில் நானும், எனது கணவரும் கையெழுத்திடும்படி மிரட்டி வருகின்றனர். மேலும், என்னையும், எனது கணவரையும் வேலைக்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர். எனவே எங்களிடம் தொடர்ந்து கந்து வட்டி கேட்டு மிரட்டி வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

 

Tags :

Share via