நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை

by Editor / 24-11-2022 08:43:02am
நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே. நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25). இவரது மனைவி கார்த்திகா(23)விற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால் கடந்த ஆண்டு நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

ஓராண்டு கழித்து மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மீண்டும் நேற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது குறித்து அதிர்ச்சியடைந்து மருத்துவர்களிடம் கேட்டபோது மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இது குறித்து குழந்தையின் தந்தை மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஒரு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றிய செய்த அதிர்ச்சி சம்பவம் எதிரொலியாக சைல்டுலைன் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இந்த அலட்சியமான சம்பவம் பொதுமக்கள், நோயாளிகளை மேலும் பீதியடையச் செய்துள்ளது.

 

Tags :

Share via