6 மாத கர்ப்பிணியை கொன்ற கணவன் கைது
கர்நாடகா கங்ககொண்டனஹல்லி கிராமத்தை சேர்ந்த மோகன் குமார் என்பவர் தனது ஆறுமாத கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது. வரதட்சனை தொடர்பாக கணவன் வீட்டினர், கர்ப்பிணி பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். உணவு, மருந்து கொடுக்காமல் 6 மாதம் அவரை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் தன் சகோதரியுடன் பேசியதால் ஆத்திரம் அடைந்த மோகன் குமார் மனைவியை கொலை செய்து காட்டில் புதைத்துள்ளார். பின் மனைவி ஓடிவிட்டதாகவும் நாடகமாடியுள்ளார். இதனை விசாரித்த போலீசார், உண்மையை கண்டறிந்து கணவனை கைது செய்தனர்.
Tags :