அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ - 10 பேர் பலி

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் 9 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.
Tags :