யானைகள் நடமாட்டம் மக்கள் பீதி
கோவை மாவட்ட வால்பாறை பகுதிகள் யானைகளின் சரணாலயமாக மாறிவருகிறது.வால்பாறை பகுதியில் தொடர்ந்து சிறு குன்றா மற்றும் அக்கா மலை கருமலை போன்ற பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் அச்சம் அடைந்துள்ளனர்.வனத்துறை நடவடிக்கை எடுத்து யானைக் கூட்டங்களை வனத்துக்குள் துரத்துவதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Tags : யானைகள் நடமாட்டம்