ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்தி சென்ற மர்ம பெண்

by Staff / 13-06-2022 12:34:29pm
ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்தி சென்ற மர்ம பெண்

 ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் 3 வயது சிறுமியை மர்ம பெண் கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது .மிர்சாவாலி தம்பதியினருக்கு மூன்று வயது ஹபிதா என்ற மகள் உள்ளார் கடந்த 8ஆம் தேதி ஹபிதா தாயுடன் ரயில் நிலையத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனார் புகாரின் பேரில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது ஹபிதாவை மர்ம பெண் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது இது தொடர்பாக 3 தனிப்படை அமைத்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via