நெல்லையப்பர்  திருக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

by Editor / 28-12-2022 08:20:49am
நெல்லையப்பர்  திருக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை அமைந்துள்ள நெல்லை நெல்லையப்பர திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது பெரிய சபாபதி சன்னதியில் திருவென்பாவை பாடல்பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்,ஐந்தாம் தேதி நள்ளிரவு தாமரை சபா மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அதிகாலை 2 மணிக்கு கோபூஜையும் அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெறுகிறது.

 

Tags :

Share via