திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

by Editor / 28-12-2022 08:19:55am
திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

குற்றாலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா இன்று  28ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
  குற்றாலம் குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடத்துவது. வழக்கம் இந்த ஆண்டு திருவிழா இன்று   காலை மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவில் ஜனவரி 1ம் தேதி காலை 8 மணிக்கு மேல் ஐந்து தேர்கள் ஓடும் தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர், முருகர், நடராஜர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்படுகிறது. 4ம்தேதி காலை 9 மணிக்கு மேல் சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடந்தது. மேலும் திருவிழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு மேலும், இரவு 7 மணிக்கு மேலும்  நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா, கண்ணதாசன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via