நீட் தேர்வில் அதிரடி மாற்றம்

by Editor / 14-07-2021 08:24:27am
நீட் தேர்வில் அதிரடி மாற்றம்

இந்த ஆண்டு, நீட் வினாத்தாள் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கிய நிலையில் அடுத்த மாதம், 6ஆம் தேதி வரை ntaneet.nic.in/ என்ற, இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.

வழக்கமாக நீட் வினாத்தாளில், 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா, 4 மதிப்பெண்கள் வீதம், 720 மதிப்பெண் வழங்கப்படும். இந்த வினாத்தாள் முறையில், இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதன் முறையாக, சாய்ஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், ' ஏ ' பிரிவில் , 35, ' பி ' பிரிவில் , 15 என , நான்கு பாடங்களுக்கு தலா , 50 கேள்விகள் வீதம் , மொத்தம் , 200 கேள்விகள் இடம் பெற உள்ளன .

இவற்றில் , 180 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் . அதாவது , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் மற்றும் விலங்கியல் என , ஒவ்வொரு பாடத்திலும் , ' ஏ ' பிரிவில் உள்ள , 35 கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் .

' பி ' பிரிவில் , 15 கேள்விகளில் , சாய்ஸ் அடிப்படையில் , தங்களுக்கு நன்றாக விடை தெரிந்த , 10 கேள்விகளுக்கு மட்டும் , பதில் அளித்தால் போதும் என , அறிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி , தலா , ஐந்து கேள்விகள் , மாணவர்களின் விருப்பத்திற்காக வழங்கப்பட்டுள்ளன .தவறான விடையை தேர்வு செய்தால் , ' மைனஸ் ' மதிப்பெண்ணாக , ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் . பதில் அளிக்காவிட்டால் , அதற்கு , ' நெகட்டிவ் ' மதிப்பெண் கிடையாது என்ற நடைமுறை தொடர்கிறது.'நீட்' தேர்வு, தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா மற்றும் பஞ்சாபி என மொத்தம், 13 மொழிகளில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை, 11 மொழிகளில் மட்டுமே தேர்வு நடந்தது. இம்முறை மலையாளமும், பஞ்சாபியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via