விவசாயிகள் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என கூறி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் ஆளுநர் மாளிகைக்கு பேரணி சென்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரையும் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கிண்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தங்க வைத்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கிண்டி அண்ணா சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags :