ஆன்லைன் ரம்மி விளையாட்டு அவசரச் சட்டம் காலாவதியான நாளில் பலியான வட மாநில பெண்

by Editor / 28-11-2022 09:35:58am
ஆன்லைன் ரம்மி விளையாட்டு அவசரச் சட்டம் காலாவதியான நாளில் பலியான வட மாநில பெண்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லுர் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி பந்தனாமாஜி தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் ஆண்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி எழுபதாயிரம் ரூபாய் பணத்தை  இழந்துந்துள்ளார். அதனால் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் 

இதனைதொடர்ந்து  வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை. விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.மேலும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியானது குறிப்பிடத்தக்கது.

 

Tags : அவசரச் சட்டம் காலாவதியான நாளில் பலியான வட மாநில பெண்

Share via