கூட்டு பலாத்காரம் டிரைவர் 3 கைது

by Staff / 30-11-2022 02:23:07pm
கூட்டு பலாத்காரம் டிரைவர்  3 கைது

பெங்களூரு மாநிலம், எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் நள்ளிரவு நண்பரின் வீட்டில் பார்ட்டி முடித்துவிட்டு போதையில் ரேபிடோ புக் செய்து, தனது இருப்பிடத்திற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் அவர் போதையில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திய டிரைவர், தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று தனது நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.காலையில் அந்த பெண் தன் வீட்டிலிருந்து எழுந்த போது, கடுமையான உடல் வலியை உணர்ந்ததால் மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், ரேபிடோ டிரைவர், அவரது நண்பர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்து பெண் என 3 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via