தண்டவாளம் அருகே நின்ற இயந்திரம் மோதி ரயில் விபத்து பெட்டிகள் தடம்புரண்டு 22 பயணிகள் பலி

by Staff / 09-06-2022 01:45:48pm
தண்டவாளம் அருகே நின்ற இயந்திரம் மோதி ரயில் விபத்து பெட்டிகள் தடம்புரண்டு 22 பயணிகள் பலி

தெற்கு ஈரான்  நோக்கி சென்ற பயணிகள் ரயில் தண்டவாளம் அருகே இருந்த மணல் அள்ளும் இயந்திரத்தின் மீது மோதி தடம் புரண்ட விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். டாபஸ் நகரிலிருந்து யஸ்தா  நகர் நோக்கி 350 பயணிகளுடன் சென்ற ரயில் தண்டவாளம் அருகே இருந்த மணல் அள்ளும் ராட்சத இயந்திர மீது மோதியது .கட்டுப்பாட்டை இழந்த ரயில் பெட்டிகள் தடம்புரண்ட பெட்டிகள் குலுங்கியது அதிலிருந்து பயணிகள் அங்காங்கே தூக்கி வீசப்பட்டனர்  சம்பவம் இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன 22 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 90 பயணிகளின் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

 

Tags :

Share via