வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றசாட்டு.

by Editor / 02-12-2022 07:02:57am
வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றசாட்டு.

தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளியான பரமசிவன் இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுரண்டை வரகுனராமபுரம் பகுதியில் வசித்து வருகிறார் இவரது மகன் முத்து. இவர் சுரண்டையில் இருந்து வாடியூருக்கு செல்லும் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் 30 ஆம் தேதி தோட்டத்தில் உள்ள மாட்டு தொழுவத்தில் இவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் அழகப்பபுரத்தில் இருந்த பரமசிவத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த பொழுது மாட்டுத்தொழுவில் மாடுகள் கட்சிப்போட்டு இருந்த இடத்தில் தூங்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரது உறவினர்கள் திரண்டு வந்து இந்த சம்ப்வம் கொலைதான் என்று கூரிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தினர் முத்து சாவில் மர்மம் இருப்பதாகவும்   கூறி அவருடைய குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via