மூதாட்டி தீ குளித்து தற்கொலை

by Staff / 09-12-2022 12:25:40pm
  மூதாட்டி தீ குளித்து  தற்கொலை

புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதி பாலக்காவிளை பகுதியை  சேர்ந்தவர் ராஜரெத்தினம் மனைவி விமலா(75). இவர் சர்க்கரை நோயால்  அவதிப்பட்டு  வந்துள்ளார். தொடர்  சிகிட்சயில் மருந்து  சாப்பிட்டு  வந்ததால் மன அழுத்தத்தில்  காணப்பட்டுள்ளார்.   இந்த  நிலையில் சம்பவ தினம் வீட்டில்  இருந்த மண்ணெண்ணெய் எடுத்து  உடலில் ஊற்றி தீவைத்து  தற்கொலை  செய்துள்ளார். இது தொடர்பாக  அவரது  மகன் எட்வின் மோகன் தாஸ்  என்பவர்  புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார்  வழக்கு பதிவு  செய்து  விசாரித்து  வருகின்றனர்.

 

Tags :

Share via