உணவுத்தட்டில் முடி:மனைவிக்கு மொட்டை கணவர் கைது.

by Editor / 12-12-2022 08:28:47am
உணவுத்தட்டில் முடி:மனைவிக்கு மொட்டை கணவர் கைது.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபீத் மாவட்டத்தில் உள்ள மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிருதீனுக்கும், சீமாதேவி என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் சீமாதேவி தனது கணவருக்கு உணவு பரிமாறினார். அப்போது தட்டில் முடி இருந்ததை பார்த்து கோபமடைந்த கணவர் சீமாதேவியின் தலையை மொட்டையடித்துள்ளார். இந்த கொடூரம சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, ஜாஹிருதீனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சீமாதேவி திருமணமானதில் இருந்து, வரதட்சணை கேட்டு, மாமியார் துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via