கார் கண்ணாடியை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு

by Staff / 17-12-2022 01:45:18pm
கார் கண்ணாடியை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு

கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேப்பன் (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்து டன் பெங்களூரில் இருந்து கேரளா மாநிலத்திற்கு காரில் சென்றார். பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சா லையில் மாமாங்கத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட காரை நிறுத்தினார். சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் காரில் இருந்த ரூ. 50 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓட்டல் முன்பு அமைக்கப் பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via

More stories