மருமகனைக் குத்திக் கொன்ற மாமனார்

by Staff / 19-12-2022 04:34:29pm
மருமகனைக் குத்திக் கொன்ற மாமனார்

கர்நாடக மாநிலம் பகலகோட் மாவட்டத்தில் கவுரவக் கொலை நடந்துள்ளது. ஜமகண்டி தாலுகாவில் உள்ள தக்கோடா கிராமத்தில் தனது மகளை திருமணம் செய்ததற்காக இளைஞரை இளம்பெண்ணின் தந்தை கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.புஜபலி (34) என்ற இளைஞர், வேற்று சமூகத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற இளம்பெண்ணை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சனிக்கிழமை இரவு, புஜபலி தனது சகோதரனின் மகனுடன் நடந்து சென்றபோது, ​​இளம்பெண்ணின் தந்தை தம்மனகவுடா பாட்டீல், அவர் மீது மிளகாய்பொடி தூவி கத்தியால் குத்திக் கொன்றார். இதனை தொடர்ந்து போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags :

Share via