குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்- வீடியோ வெளியானது எப்படி?

by Admin / 31-08-2021 04:32:35pm
குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்- வீடியோ வெளியானது எப்படி?


விவகாரத்து பெற முடிவு செய்த வடிவழகன் ஆந்திர மாநிலத்துக்கு சென்று, திருமணத்தின்போது துளசியின் குடும்பத்தினர் கொடுத்த நகையை திருப்பி கொடுத்துள்ளார்.

துளசியின் நடவடிக்கை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், வடிவழகனுக்கும், துளசிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் துளசி ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், துளசியிடம் இருந்து விவகாரத்து பெற முடிவு செய்த வடிவழகன் ஆந்திர மாநிலத்துக்கு சென்றார். அப்போது கையெழுத்து பெறும்போது திருமணத்தின்போது துளசியின் குடும்பத்தினர் கொடுத்த நகையையும் வடிவழகன் திருப்பி கொடுத்துள்ளார்.
 
மேலும், தான் வாங்கி கொடுத்த செல்போனை தருமாறு வடிவழகன் துளசியிடம் கூறினார். துளசியும் இத்தனை நாளாக பயன்படுத்தி வந்த செல்போனை அவரிடம் ஒப்படைத்தார். செல்போனை பெற்று வீடு திரும்பிய வடிவழகன், எதேச்சையாக அதை பார்த்தபோது தான் அதில், தனது பிஞ்சு குழந்தை, நய வஞ்சக தாயின் கைகளால் ரத்தம் சொட்ட சொட்ட அடி வாங்கும் வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற அவர் என்ன செய்வது என்று தெரியாமல், கண்கலங்கினார்.

இதையடுத்து, தனது மனைவியின் கல்நெஞ்சத்தை உறவினர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வீடியோவை அவர் அனுப்பிவைத்த போது, அடுத்தடுத்து அந்த வீடியோ வைரலானது தெரியவந்தது.

 

Tags :

Share via