குப்பை லாரிகள்.. தடை செய்யக் கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

by Staff / 20-12-2022 03:57:40pm
குப்பை லாரிகள்.. தடை செய்யக் கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள் பெரும்பாலும் காலை நேரங்களிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதாக கூறி கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via