கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 5-மீனவர்கள் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கீழ கடியபட்டணத்தை சேர்ந்தவர் எட்வின் ஜெனில்(34). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 18 ம் தேதி பிற்பகல் வழக்கம்போல் கடியபட்டணத்தை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளர்கள் சார்லஸ் எட்வின் (45), பிரான்சிஸ் (71), ஜோசப் (63), சகாய பெனின்(33)ஆகியோருடன் எட்வின் ஜெனில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மறுநாள் 19 ம் தேதி இவர்கள் கரை திரும்ப வேண்டும். ஆனால் 3 நாட்கள் ஆகியும் மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர். இது குறித்து குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தூத்துக்குடி கடலோரக்காவல் படையும் கன்னியாகுமாரி கடல் பகுதியில் தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்து கரை திரும்பிய அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகில் கரைநோக்கி திரும்பிவரும் மீனவர்கள் 5 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து திரும்பி வருவதாக கடலோரக்காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர். இந்த விசைப்படகு நாளை (புதன்கிழமை) அதிகாலை கரை திரும்பும் என கூறப்படுகிறது.
Tags :