பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பு. கொளக்குடி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் மருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மருதூர் போலீசார் உடலை கை பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து பு. கொளக்குடி கிராம நிர்வாக அலுவலர் சுந்தரகணேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :