சந்தன கட்டை பறிமுதல் ஒருவர் கைது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள லட்சுமி திரையரங்கம் அருகே வேலூர் தெற்கு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சந்தன மரம் கடத்தி வந்த ஆரணி பகுதி சேர்ந்த ராஜசேகரன் (28) கைது. ஒருவர் தப்பி ஓட்டம். சுமார் 10 கிலோ சந்தன கட்டை, இருசக்கர வாகனம், கத்தி, வால் பறிமுதல் செய்து வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை.தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.பிடிபட்ட நபரை வேலூர் வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர்.
Tags :



















