பெண் பலாத்காரம்: சாமியார் கைது

by Staff / 30-12-2022 11:56:25am
பெண் பலாத்காரம்: சாமியார் கைது

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள அனுமான் கோவிலில் வைத்து நேற்று மஹந்த் சர்ஜுதாஸ் மகராஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சர்ஜூதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ஜு மகராஜ் தன்னை பலாத்காரம் செய்ததாக மண்டல் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். சர்ஜுதாஸ் மஹந்தை அவரது ஆசிரமத்தில் இருந்தே போலீசார் கைது செய்தனர். மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via