100க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதி
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மதம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சியின்போது உணவு பரிமாறப்பட்ட நிலையில் அதை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த நிகழ்வை நடத்தியவர்கள் மீது போலீசார் 268, 272, 269 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :