சிக்கன் சாப்பிட்டதால் பெண் மரணம்
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ரஷ்மி என்ற பெண், நர்ஸாக பணி புரிந்து வருகிறார். இவர் கடை ஒன்றில் 2 தினங்களுக்கு முன் சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிட்டுள்ளார். இதற்கு பின் ஒரு மணி நேரத்தில் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறையினர் உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர். இதை தொடர்ந்து ரஷ்மையை போலவே 20 பேருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :