நேட்டா உச்சிமாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு

by Staff / 30-03-2022 02:08:03pm
நேட்டா உச்சிமாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு

அடுத்த வாரம் பிரேஸ்சிலில் நடைபெறவுள்ள நேட்டா கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 6 7 தேதிகளில் நேட்ட பொதுச் செயலாளர் தலைமையில் நேட்ட  உச்சி மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா பின்லாந்து ஜார்ஜியா ஜப்பான் நியூசிலாந்து கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது.

 உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதிலிருந்து முப்பது நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கூறப்படுவது இது இரண்டாவது முறையாகும் சில அமைச்சர்கள் வீடியோ இணைப்பு மூலம் கலந்து கொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via