பைக்கில் மோதிய டிராக்டர் - உடல் நசுங்கி 2 பேர் பலி

by Staff / 06-01-2023 01:22:16pm
பைக்கில் மோதிய டிராக்டர் - உடல் நசுங்கி 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள மறையூர் பட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் விஜயகுமார் (வயது 36). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் கவுரி சங்கர், இந்து பிரகாஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர். கவுரிசங்கரும், இந்து பிரகாசும் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து இருந்தனர். இந்த நிலையில் உடுமலை யு. கே. சி. நகரைச் சேர்ந்த சாந்து மொஹம்மது என்பவரது மகன் ரஹீம் (31) என்ற அய்யப்ப பக்தருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் விஜயகுமார் வெளியே சென்றுள்ளார்.

இருசக்கர வாகனத்தை ரகீம் ஓட்டிச்சென்றார். பின்னால் விஜயகுமார் அமர்ந்திருந்தார். இருவரும் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பிரிவு அருகில் வந்த போது எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய ரஹீம், விஜயகுமார் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் டிராக்டரை ஓட்டி வந்த சின்ன வாளவாடியைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 54) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டரில் சிக்கி அய்யப்ப பக்தர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via