சேலம் அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ. 80 ஆயிரம், 4 சவரன் பறிப்பு

by Staff / 09-01-2023 12:45:38pm
சேலம் அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ. 80 ஆயிரம், 4 சவரன் பறிப்பு

சேலம் அருகே வீராணம் டி. பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பட்டி தாதனூர் வழியாக அயோத்தியாபட்டணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேர் திடீரென அசோக்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 80 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் வீராணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து பணம், நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via