இரத்த வாந்தி எடுத்த நிலையில் முதியவர் உயிரிழப்பு

by Staff / 09-01-2023 03:12:19pm
இரத்த வாந்தி எடுத்த நிலையில் முதியவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 66 வயதான அண்ணாதுரை, இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு, தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார், இவர் இடம் கிடைக்கும் இடத்தில் தங்கியும் கிடைத்த வேலையை செய்து சாப்பிட்டும், மது அருந்தியும் வாழ்ந்து வந்துள்ளார், இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி, மது போதையில் இருந்த அண்ணாதுரை, சிங்காநல்லூர் அடுத்த இ எஸ் ஐ, சர்க்கரை செட்டியார் வீதி பகுதியில், ரத்த வாந்தி எடுத்த நிலையில், மயங்கி சாலையில் கிடந்துள்ளார், உடனடியாக இது குறித்து அருகில் இருந்தவர்கள் அண்ணாதுரையின் மகன் விக்னேஷ் க்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த விக்னேஷ், உடனடியாக தந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் சென்றுள்ளார், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர், இதனை தொடர்ந்து இது குறித்து விக்னேஷ் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via