தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக

by Staff / 21-01-2023 01:31:49pm
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, ஈரோடு பெரியார் நகரில் காங்கிரஸ் வேட்பாளருக்காக (இன்னும் அறிவிக்கப்படாத) தேர்தல் பிரசாரத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கினார். மேலும், வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இயல்பானது. கடந்த 18 மாதங்களில் நாங்கள் செய்த சாதனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

 

Tags :

Share via