ஜேசிபி மீது விழுந்த குடிநீர் தொட்டி

by Staff / 25-01-2023 02:24:41pm
ஜேசிபி மீது விழுந்த குடிநீர் தொட்டி

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் பொந்தம்புளி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, கலெக்டர் உத்தரவின்பேரில், புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற முடிவு செய்த நிலையில், இடித்தபோது திடீரென நீர்த்தேக்க தொட்டி சாய்ந்து ஜேசிபி எந்திரம் மீது விழுந்தது. டிரைவர் குதித்து ஓடியதால் உயிர் தப்பினார். மேலும் அந்த பகுதியில் பணியில் இருந்தவர்களும் சிதறி ஓடினர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories