கெஜ்ரிவாலால் முடிகிறது என்றால் சீமானால் முடியாதா

by Staff / 25-01-2023 02:12:18pm
கெஜ்ரிவாலால் முடிகிறது என்றால் சீமானால் முடியாதா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது எனவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பேட்டியளித்த அவர், அரவிந்த் கெஜ்ரிவாலால் முடிகிறது என்றால் சீமானால் முடியாதா?, ஈரோடு கிழக்கு தொகுதியில் 30 சதவிகித ஆதிகுடி மக்கள் சிறுபான்மையினர் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும். வரும் 29ஆம் தேதி வேட்பாளர் யார் என்பது பற்றி அறிவிக்கப்படும் என்றார்.

 

Tags :

Share via