ரயில் முன் பாய்ந்த இளைஞர்உயிர்போகும் நொடியில் காப்பாற்றிய அதிகாரி

by Staff / 24-03-2022 05:51:21pm
ரயில் முன் பாய்ந்த இளைஞர்உயிர்போகும் நொடியில் காப்பாற்றிய அதிகாரி

மகாராஷ்டிராவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய இருந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி நொடி பொழுதில் காப்பாற்றிய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள விட்டல்வாடி ரயில் நிலையத்தில் அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்  கொள்ள இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார்.

அப்போது இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரி நொடி பொழுதில் செயல்பட்டு இளைஞரை தண்டவாளத்துக்கு வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார்.
 
தன் உயிரை துச்சமென மதித்து இளைஞரை காப்பாற்றிய ரயில்வே அதிகாரியின் செயல் பலரையும் கவர்ந்து வருகிறது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Tags :

Share via