17 வயது சிறுமி ஓடும் காரில் கூட்டு பலாத்காரம்

by Staff / 27-01-2023 11:46:13am
17 வயது சிறுமி ஓடும் காரில் கூட்டு பலாத்காரம்

மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சவோனர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவருக்கு லிப்ட் தருவதாகக் கூறி இரண்டு பேர் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வேகமாகச் சென்று, சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றனர். அங்கிருந்து கண்ணீருடன் தப்பி ஓடிய சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,இரண்டு குற்றவாளிகளையும் புதன்கிழமை போலீசார் கைது செய்தனர். சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via