நம்பியவர்களே இப்படி செய்றாங்களே -சசிகலா வேதனை 

by Editor / 02-07-2021 07:25:17pm
நம்பியவர்களே இப்படி செய்றாங்களே -சசிகலா வேதனை 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தினந்தோறும் அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி, அந்த ஆடியோவை வெளியிட்டு வருகிறார்.
திருப்பூரைச் சேர்ந்த ரெய்ஹானா பானு, போடியைச் சேர்ந்த வினித், நெல்லையைச் சேர்ந்த மணிகண்டன், நாமக்கல்லைச் சேர்ந்த ரகுமான், தூத்துக்குடியைச் சேர்ந்த ஹென்றி தாமஸ், ராமதாஸ் ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர், “அதிமுகவில், தொண்டர்கள் தேர்வு செய்பவரே தலைமைக்கு வரமுடியும். அம்மா (ஜெயலலிதா) ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். நம்பியவர்களே எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாங்கனு கனவுல கூட நான் நினைக்கல. இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுகூட பார்க்கவில்லை. நம்ம கட்சி இப்படி சீரழியுறதை பாக்க முடியல. கண்டிப்பா வந்து கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன்.

எம்ஜிஆர் மறைந்தபோது கட்சியை வழி நடத்திய அம்மா போல, நானும் வழி நடத்துவேன். இது ஒரு சத்திய சோதனை. தொண்டர்கள் துணையோட அதை வென்று காட்டுவேன். கட்சிக்கு இப்போ ஒற்றுமைதான் வேணும். தலைவர் (எம்ஜிஆர்) மறைவுக்கு பிறகு பிரிஞ்ச 2 அணிகளை ஒரே கட்சியா இணைக்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கேன். அப்படி ஒரு நிலைமைதான் இப்போவும் ஏற்பட்டிருக்கு. இதுலயும் நான் நிச்சயம் வெற்றி அடைஞ்சு காட்டுவேன்” என சசிகலா பேசியுள்ளார்.

 

Tags :

Share via