வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக காட்டுதீ..

by Editor / 04-03-2023 11:18:59pm
 வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக காட்டுதீ..

கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு அருகே உள்ள ஒட்ட‌ன்ச‌த்திர‌ம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கருவேலம்பட்டி, கோம்பைப்ப‌ட்டி வனப்பகுதியில் காட்டு தீ, தீயை க‌ட்டுப்ப‌டுத்தும் ப‌ணியில் வ‌ன‌த்துறையின‌ர் தீவிர‌ம்.

தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி நான்காவது மலையில் காட்டுத்தீ பரவியதால் மலைவாழ் மக்கள் உதவியுடன் வனத்துறை பணியாளர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை அருகிலுள்ள ஆரியங்காவு வனப்பகுதியில் காட்டுதீ.மக்கள் உதவியுடன் வனத்துறை பணியாளர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via