அறிவியல் விஞ்ஞானி தாயின் தங்க சங்கிலியை பறித்த பக்கத்து வீட்டு  பெண் கைது 

by Editor / 11-02-2023 10:26:27am
 அறிவியல் விஞ்ஞானி தாயின் தங்க சங்கிலியை பறித்த பக்கத்து வீட்டு  பெண் கைது 

  குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நன்னகரம் இந்திரா நகர் பகுதி பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் மறைந்த காசிநாதன் என்பவரது வீட்டில் அவர் மனைவி சொர்ணம் இவர் மட்டும் தனியாக வசித்து வருகின்றார்.
 இவரது மூன்று மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர் ஒரு மகன் அறிவியல் விஞ்ஞானியாக பீகார் மாநிலத்தில் உள்ளார். மற்றொரு மகன் திசையன்விளையில் தலைமை ஆசிரியராகவும் மற்றொருவர் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் மூதாட்டி மற்றும் வீட்டில் தனியாக  இருந்து வருகிறார். இவரது வீட்டைச் சுற்றி இவரது தம்பி,தங்கை உள்ளிட்ட  உறவினர்கள் தனித் தனி இல்லங்களில் வசித்து வரும் நிலையில் வழக்கம்போல் எப்பொழுதும் இரவு 7 மணி அளவில் வீட்டை பூட்டி தூங்கிவிடும் மூதாட்டி  நேற்று இரண்டாம் தேதி அன்று வழக்கத்திற்கு மாறாக வீட்டின் வாயில் கதவு மற்றும் முன் கேட் உள்ளிட்டவைகளை மூடிய நினைவில் வீட்டுக்குள் அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணி அளவில்  திறந்து கிடந்த வீட்டுக்குள் நுழைந்த  முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியினுடைய முகத்தில் தலையணை வைத்து அமுக்கி அவர் அணிந்திருந்த சுமார் 5.1/2பவுன் தங்க சங்கிலியை  மட்டும் பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.மேலும்  மூதாட்டி எந்தவிதமான சத்தமும் எழுப்பாமல் அச்சத்தில் உறைந்து போய் கட்டிலில் அப்படியே படுத்த நிலையில் கிடந்துள்ளார். கடந்த அதிகாலை 4 மணி அளவில் அவரது எதிர் வீட்டில் வசிக்கும் உறவினர்கள் வீட்டின் வாயில் கதவை திறக்கும் சத்தம் கேட்டு மூதாட்டி எழுந்து போய் நடந்த சம்பவத்தை  தனது உறவினரிடம் தெரிவிக்கவே அவர் மற்றும் மற்ற உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து தென்
காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன், உதவி கண்காணிப்பாளர் மணிமாறன் மற்றும் ஏராளமான  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் அதிகாலை நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியா நிலையில் கொள்ளையில் ஈடுப்பட்ட பக்கத்து விட்டைசேர்ந்த பிரஜித் என்பவரது மனைவி பிரசன்னரெஜி (35)என்ற பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5.1/2பவுன் தங்கள் செயினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via