13 மாநிலங்களுக்கு ஆளுநர் நியமனம்- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.
இந்தியாவில் 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ஜார்க்கண்டிற்கு தமிழக பாஜக மூத்த நிர்வாகி சிபி ராதாகிருஷ்ணன், அருணாச்சலப் பிரதேசத்திற்கு திரிவிக்ராம் பர்னாயக், சிக்கிமிற்கு லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா, இமாச்சலப்பிரதேசத்திற்கு பிரதாப் சுக்லா, அசாமிற்கு குலாப் சந்த் கட்டாரியா, ஆந்திராவிற்கு அப்துல் நசீர், நாகாலந்திற்கு இல.கணேசன், சத்தீஸ்கருக்கு பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன், மணிப்பூருக்கு அனுசுயா, மேகலாயாவிற்கு பகு சவுகான், பீகாருக்கு ராஜேந்திர விஸ்வநாத், மகாராஷ்டிராவிற்கு ரமேஷ் பைஸ், லடாக்கிற்கு மிஸ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :