நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி..? தேடும்பணி திவீரம். 

by Editor / 12-02-2023 12:49:52pm
நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி..? தேடும்பணி திவீரம். 

 மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உப்பு பள்ளம் பவானி ஆற்றில் நேற்று மாலை 3.30 மணியளவில் கோவையை சேர்ந்த 6 பள்ளி மாணவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. உடனே 4 மாணவர்கள் நீந்தி கரைக்கு வந்துவிட்டனர். மற்ற 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை கண்ட சக மாணவர்கள் கூச்சல் போட்டனர். தேடும் பணி நிறுத்தம் மேலும் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், ஆற்றில் இறங்கி 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ தொடங்கியதால், ேதடும் பணி கைவிடப்பட்டது. இதனால் 2 மாணவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கவுதம்(வயது 16) என்பதும், மற்றொருவர் சிங்காநல்லூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இன்று காலையில் அவர்களது உடலைத்தேடும்பணி நடந்துவருகிறதுஇதனால் உறவினர்கள், சக மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Tags :

Share via