ஜார்கண்ட் மாநிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்றுவேன் -சி.பி.ஆர் 

by Editor / 12-02-2023 01:19:07pm
ஜார்கண்ட் மாநிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்றுவேன் -சி.பி.ஆர் 

ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவிக்கையில் தான் தமிழகத்திலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை ஆகும் என்றும்,ஜார்கண்ட் மாநிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்ற உள்ளதாகவும்,ஜார்கண்ட் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக பணியாற்ற உள்ளேன் என்றும்,ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியலின் பரிணாம வளர்ச்சியாக பார்ப்பதாகவும்,தமிழகத்திலிருந்து மீண்டும் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் மத்திய அரசு தமிழகத்தின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via